• Jun 05 2025

வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சி; பல தரப்புக்களுடன் பேசும் அநுர அரசு

Chithra / May 11th 2025, 11:48 am
image

 

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சியை ஏற்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 

இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் வெற்றியளித்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு வடக்கு கிழக்கு அரசியல் தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில்  தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளது.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் பின்னடைவுகளை சந்தித்துள்ளதுடன், தென்னிலங்கையிலும் ஒரு சில உள்ளுராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் வெற்றிப்பெற்ற சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்கைளை முன்னெடுத்து வருகிறது. 

வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சி; பல தரப்புக்களுடன் பேசும் அநுர அரசு  வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சியை ஏற்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் வெற்றியளித்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு வடக்கு கிழக்கு அரசியல் தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில்  தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளது.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் பின்னடைவுகளை சந்தித்துள்ளதுடன், தென்னிலங்கையிலும் ஒரு சில உள்ளுராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது.இவ்வாறானதொரு நிலையில் வெற்றிப்பெற்ற சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்கைளை முன்னெடுத்து வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now