• Sep 03 2025

செம்மணி ஊடாக பயணித்தும் கீழே இறங்கி பார்க்காமல் சென்ற அநுர!

Chithra / Sep 3rd 2025, 8:09 am
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், பலரும் எதிர்பார்த்த செம்மணி விஜயம் நடைபெறாமை பலரை ஏமாற்றமடைய வைத்துத்துள்ளது. 

அவர் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பின்னராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  


எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி வீதியை கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை.

செம்மணி அகழ்வு இடைநிறுத்தப்படமாட்டாது என்றும், செம்மணி தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதியின் செம்மணி நோக்கி பயணம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அங்கு செல்லாமல் அதனை கடந்து சென்றமை தமிழ்  மக்களை சற்று ஏமாற்றமடையச் செய்துள்ளது.

 

செம்மணி ஊடாக பயணித்தும் கீழே இறங்கி பார்க்காமல் சென்ற அநுர ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், பலரும் எதிர்பார்த்த செம்மணி விஜயம் நடைபெறாமை பலரை ஏமாற்றமடைய வைத்துத்துள்ளது. அவர் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பின்னராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி வீதியை கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை.செம்மணி அகழ்வு இடைநிறுத்தப்படமாட்டாது என்றும், செம்மணி தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.இதனையடுத்து ஜனாதிபதியின் செம்மணி நோக்கி பயணம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அங்கு செல்லாமல் அதனை கடந்து சென்றமை தமிழ்  மக்களை சற்று ஏமாற்றமடையச் செய்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement