• Mar 06 2025

தமிழ் மக்களை ஏமாற்றுகிறது அநுர அரசு! குற்றஞ்சாட்டிய ஜோசப் ஸ்டாலின்

Chithra / Mar 5th 2025, 8:27 am
image

 

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசாங்கங்களைப் போன்று அநுர அரசாங்கமும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமராட்சிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என அராசங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பொலிஸ்மா அதிபரே கைதாகும் அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும்  தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு உள்ளிட்ட தமிழர் விவகாரங்களில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அனுர அரசும் ஏமாற்றும் விதத்திலேயே செயற்பட்டு வருகிறது.

ஜெனீவா விவகாரம் மற்றும் வரவு - செலவு திட்டம் ஆகியவற்றில் இந்த விடயங்கள் குறித்து அதிகமாக பேசுகின்ற அளவுக்கு நடைமுறையில் செயற்படுத்துவதில் இந்த அரசு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. 

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரது அண்மைக்கால பேச்சுகள் இதனையே உறுதிப்படுத்துகின்றன.

அரசியல் தேவைகளுக்காக மீனவர் பிரச்சினையை கையிலெடுக்காது கடல் வளத்தையும் மீனவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இரு நாட்டு அரசுகளும் சாத்தியமான வழிமுறைகளில் தீர்வுகான முன்வரவேண்டும்  என்றார்.

தமிழ் மக்களை ஏமாற்றுகிறது அநுர அரசு குற்றஞ்சாட்டிய ஜோசப் ஸ்டாலின்  தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசாங்கங்களைப் போன்று அநுர அரசாங்கமும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.வடமராட்சிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என அராசங்கம் தெரிவித்துள்ளது.இருப்பினும், பொலிஸ்மா அதிபரே கைதாகும் அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். மேலும்  தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு உள்ளிட்ட தமிழர் விவகாரங்களில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அனுர அரசும் ஏமாற்றும் விதத்திலேயே செயற்பட்டு வருகிறது.ஜெனீவா விவகாரம் மற்றும் வரவு - செலவு திட்டம் ஆகியவற்றில் இந்த விடயங்கள் குறித்து அதிகமாக பேசுகின்ற அளவுக்கு நடைமுறையில் செயற்படுத்துவதில் இந்த அரசு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரது அண்மைக்கால பேச்சுகள் இதனையே உறுதிப்படுத்துகின்றன.அரசியல் தேவைகளுக்காக மீனவர் பிரச்சினையை கையிலெடுக்காது கடல் வளத்தையும் மீனவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இரு நாட்டு அரசுகளும் சாத்தியமான வழிமுறைகளில் தீர்வுகான முன்வரவேண்டும்  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement