• Mar 10 2025

போலியான பெயர்ப்பட்டியலை வெளியிடுவதில் அநுர அரசு சாதனை! ​தொலவத்த விமர்சனம்

Chithra / Mar 9th 2025, 9:24 am
image

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போலியான பெயர்ப்பட்டியல்களை வெளியிடுவதில் சாதனை படைத்துக் கொண்டிருப்பதாக பொதுஜன பெரமுண கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த விமர்சித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரகலய போராட்டக் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்களினால் எமது இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.

எங்களுக்கு வசிப்பிடங்கள் இல்லாமல் போனது. அதன் காரணமாகவே நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து 25 - 50 சதவீத முற்பணத்தை செலுத்தி வீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது.

எனவே பொய்யான பெயர் பட்டியல்களை வெளியிட்டு எதிர்தரப்பினர் மீது சேறுபூசும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.

தமது இயலாமையை மறைப்பதற்காக ஏதேனுமொரு பெயர் பட்டியல்களை வெளியிடும் அரசாங்கம் தற்போது வீடுகள் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.

அன்றைய சந்தைப் பெறுமதிக்கமையவே அந்த வீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. முற்பணம் மாத்திரமின்றி எஞ்சிய தொகையை இரு தவணைகளில் உரிய நேரத்தில் நான் செலுத்தியிருக்கின்றேன். 

இதில் என்ன நஷ்டம் என அரசாங்கம் கூறுகிறது? இவ்வாறு பொய்யான பட்டியல்களை வெளியிடுவதில் மாத்திரமே இந்த அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யே எமது வீடுகளை தீக்கிரையாக்கி எமது சொத்துக்களை அழித்தது. எனவே எமக்கு கிடைக்கப் பெற்ற இழப்பீடுகள் குறித்து பேசுவதற்கு இவர்களுக்கு உரிமையில்லை என்றும் விமர்சித்துள்ளார்.  

போலியான பெயர்ப்பட்டியலை வெளியிடுவதில் அநுர அரசு சாதனை ​தொலவத்த விமர்சனம்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போலியான பெயர்ப்பட்டியல்களை வெளியிடுவதில் சாதனை படைத்துக் கொண்டிருப்பதாக பொதுஜன பெரமுண கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த விமர்சித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.கடந்த அரகலய போராட்டக் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்களினால் எமது இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.எங்களுக்கு வசிப்பிடங்கள் இல்லாமல் போனது. அதன் காரணமாகவே நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து 25 - 50 சதவீத முற்பணத்தை செலுத்தி வீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது.எனவே பொய்யான பெயர் பட்டியல்களை வெளியிட்டு எதிர்தரப்பினர் மீது சேறுபூசும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.தமது இயலாமையை மறைப்பதற்காக ஏதேனுமொரு பெயர் பட்டியல்களை வெளியிடும் அரசாங்கம் தற்போது வீடுகள் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.அன்றைய சந்தைப் பெறுமதிக்கமையவே அந்த வீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. முற்பணம் மாத்திரமின்றி எஞ்சிய தொகையை இரு தவணைகளில் உரிய நேரத்தில் நான் செலுத்தியிருக்கின்றேன். இதில் என்ன நஷ்டம் என அரசாங்கம் கூறுகிறது இவ்வாறு பொய்யான பட்டியல்களை வெளியிடுவதில் மாத்திரமே இந்த அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யே எமது வீடுகளை தீக்கிரையாக்கி எமது சொத்துக்களை அழித்தது. எனவே எமக்கு கிடைக்கப் பெற்ற இழப்பீடுகள் குறித்து பேசுவதற்கு இவர்களுக்கு உரிமையில்லை என்றும் விமர்சித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement