• Apr 22 2025

அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து பேசாமல் வரி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது! - சுட்டிக்காட்டும் ஹர்ஷ

Chithra / Apr 21st 2025, 8:19 am
image

 


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக சென்று ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரித்தார்.

கொழும்பில் நேற்று  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது சீனாவைத் தவிர ஏனைய நாடுகளுக்கு 90 நாட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனை விடுத்து வரி நீக்கம் செய்யப்படவில்லை. 

எமக்கு முன்னர் வேறு நாடுகள் சென்று அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைத்துக் கொண்டால் எமக்கு நெருக்கடி ஏற்படும். 

எனவே எமக்கு நேரம் போதாது. விரைவில் இதற்கு பொறுத்தமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

வரி விதிக்கப்பட முன்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றார். 

அதற்கமைய அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இவ்வாரம் மோடியை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த 90 நாட்களுக்குள் ஏதேனும் செய்வதற்கு இந்தியா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பருவகால கூட்டத்துக்கு செல்லும் போது அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினரை சந்திக்கவுள்ளதாகக் கூறுகின்றனர்.

அவ்வாறான பேச்சுவார்த்தைகள் ஊடாக எதையும் செய்ய முடியாது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக சென்று ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். என்றார். 

அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து பேசாமல் வரி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது - சுட்டிக்காட்டும் ஹர்ஷ  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக சென்று ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரித்தார்.கொழும்பில் நேற்று  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,தற்போது சீனாவைத் தவிர ஏனைய நாடுகளுக்கு 90 நாட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனை விடுத்து வரி நீக்கம் செய்யப்படவில்லை. எமக்கு முன்னர் வேறு நாடுகள் சென்று அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைத்துக் கொண்டால் எமக்கு நெருக்கடி ஏற்படும். எனவே எமக்கு நேரம் போதாது. விரைவில் இதற்கு பொறுத்தமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.வரி விதிக்கப்பட முன்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றார். அதற்கமைய அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இவ்வாரம் மோடியை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த 90 நாட்களுக்குள் ஏதேனும் செய்வதற்கு இந்தியா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பருவகால கூட்டத்துக்கு செல்லும் போது அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினரை சந்திக்கவுள்ளதாகக் கூறுகின்றனர்.அவ்வாறான பேச்சுவார்த்தைகள் ஊடாக எதையும் செய்ய முடியாது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக சென்று ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement