தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றில் மையவாடியில் அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்கள் சிலவற்றின் மண்டையோடு, எலும்புகள் முதலான உடற்பாகங்கள் மர்மமான முறையில் தோண்டி எடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தென்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவிற்கு அறிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் மாலிம்மட பொலிஸ் பிரிவிலுள்ள பழமை வாய்ந்த குக்கிராமங்களில் ஒன்றான, தெலிஜ்ஜவில, ஹொரகொடவில் ஏறத்தாழ150 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மீரான் ஜும்ஆ பள்ளிவாசல் அங்குள்ளது. அங்கிருந்து சற்று தொலைவிலேயே பிரஸ்தாப முஸ்லிம் மையவாடி அமைந்துள்ளது. அதனருகிலும் சில முஸ்லிம் குடும்பங்கள் வசிப்பதோடு, ஆள் நடமாட்டமும் அங்கு குறைவாகவே காணப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில், ஹக்கீம், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இது சம்பந்தமாக ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 2023.06.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் பொழுது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, அதனை தடுப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளார் .
பின்னரும், சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
2023.07.03 ஆம் திகதி அல்லது அது அண்மித்த நாளில் இந்த முஸ்லிம் மையவாடியிலிருந்து 16 மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயோதிப மாதுவின் மண்டையோடு அகற்றப்பட்டு இருக்கிறது.
அவ்வாறே, மூன்று மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட 72 வயதான ஜெலீல் என்பவரது ஜனாஸாவை அகற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அது பற்றி மாலிம்மட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எனக்கு அறியப்படுத்துங்கள் என்றுள்ளது.
ஏன் இவ்வாறு ஜனாஸாக்களின் உடற்பாகங்கள் களவாக அகற்றப்படுகின்றன? என்று கேட்டபோது ,பொதுவாக பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளுக்கு இவ்வாறான உடற்பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுவதாகவும், சில வேளைகளில் அவை மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக எண்ணுவதாகவும் கூறினார்.
தோண்டி எடுக்கப்படும் உடல்கள் - பில்லி, சூனியம், செய்வினைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா இலங்கையில் இடம்பெறும் திகில் சம்பவங்கள் samugammedia தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றில் மையவாடியில் அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்கள் சிலவற்றின் மண்டையோடு, எலும்புகள் முதலான உடற்பாகங்கள் மர்மமான முறையில் தோண்டி எடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தென்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவிற்கு அறிவித்துள்ளார்.மாத்தறை மாவட்டத்தில் மாலிம்மட பொலிஸ் பிரிவிலுள்ள பழமை வாய்ந்த குக்கிராமங்களில் ஒன்றான, தெலிஜ்ஜவில, ஹொரகொடவில் ஏறத்தாழ150 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீரான் ஜும்ஆ பள்ளிவாசல் அங்குள்ளது. அங்கிருந்து சற்று தொலைவிலேயே பிரஸ்தாப முஸ்லிம் மையவாடி அமைந்துள்ளது. அதனருகிலும் சில முஸ்லிம் குடும்பங்கள் வசிப்பதோடு, ஆள் நடமாட்டமும் அங்கு குறைவாகவே காணப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பில், ஹக்கீம், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.இது சம்பந்தமாக ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 2023.06.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் பொழுது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, அதனை தடுப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளார் .பின்னரும், சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2023.07.03 ஆம் திகதி அல்லது அது அண்மித்த நாளில் இந்த முஸ்லிம் மையவாடியிலிருந்து 16 மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயோதிப மாதுவின் மண்டையோடு அகற்றப்பட்டு இருக்கிறது. அவ்வாறே, மூன்று மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட 72 வயதான ஜெலீல் என்பவரது ஜனாஸாவை அகற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அது பற்றி மாலிம்மட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எனக்கு அறியப்படுத்துங்கள் என்றுள்ளது.ஏன் இவ்வாறு ஜனாஸாக்களின் உடற்பாகங்கள் களவாக அகற்றப்படுகின்றன என்று கேட்டபோது ,பொதுவாக பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளுக்கு இவ்வாறான உடற்பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுவதாகவும், சில வேளைகளில் அவை மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக எண்ணுவதாகவும் கூறினார்.