தென்னையை கற்பகத்தரு என குறிப்பிட முடியாதுடன் அதன் பெயரை மாற்றியமைக்குமாறு தென்னை பயிர்ச் செய்கை யாழ் மாவட்ட முகாமையாளருக்கு கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான டக்லஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றமுன்தினம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பனை, தென்னை ஆகியவற்றை கற்பகதரு என அழைக்கப்படுவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கே தென்னையை கற்பகதரு என அழைக்க முடியாது பனையைத் தான் அவ்வாறு குறிப்பிட முடியும் எனவும் இது சம்பந்தமாக உரிய அமைச்சருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
விரைவாக அதன் பெயரை சம்பந்தப்பட்ட அதிகாரி உரிய நடைமுறையைப் பின்பற்றி மாற்றியமைக்குமாறும அதன் பிரதியை தனக்கும அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டார்.
தென்னை கற்பகதருவா. பெயரை மாற்றுங்கள்- அமைச்சர் டக்லஸ்.samugammedia தென்னையை கற்பகத்தரு என குறிப்பிட முடியாதுடன் அதன் பெயரை மாற்றியமைக்குமாறு தென்னை பயிர்ச் செய்கை யாழ் மாவட்ட முகாமையாளருக்கு கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான டக்லஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றமுன்தினம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பனை, தென்னை ஆகியவற்றை கற்பகதரு என அழைக்கப்படுவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கே தென்னையை கற்பகதரு என அழைக்க முடியாது பனையைத் தான் அவ்வாறு குறிப்பிட முடியும் எனவும் இது சம்பந்தமாக உரிய அமைச்சருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.விரைவாக அதன் பெயரை சம்பந்தப்பட்ட அதிகாரி உரிய நடைமுறையைப் பின்பற்றி மாற்றியமைக்குமாறும அதன் பிரதியை தனக்கும அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டார்.