• May 19 2024

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள்..!!

Tamil nila / May 7th 2024, 7:01 pm
image

Advertisement

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஈராக்குக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

ருவாண்டாவுக்கு நாடுகடத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது வெளியான சில ஆவணங்கள் மூலம் ஈராக்கிற்கும் நாடுகடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், ஈராக் நாட்டுக்கு, ஈராக் நாட்டவர்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பிரித்தானியாவுக்கும் ஈராக்குக்கும் இடையில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்று ஏற்கனவே இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதுமட்டுமன்றி, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எந்த நாட்டவரும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும், ருவாண்டாவுக்கு அனுப்பி, அங்குவைத்து அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பது ருவாண்டா திட்டத்தின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு புகலிடக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள், ருவாண்டாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்களே தவிர, மீண்டும் பிரித்தானியாவுக்குள் செல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரித்தானியாவில் வாழும் கனவில் செல்வோருக்கு, இறுதியில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாழும் நிலையே ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள். பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஈராக்குக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.ருவாண்டாவுக்கு நாடுகடத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது வெளியான சில ஆவணங்கள் மூலம் ஈராக்கிற்கும் நாடுகடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.ஆனால், ஈராக் நாட்டுக்கு, ஈராக் நாட்டவர்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், பிரித்தானியாவுக்கும் ஈராக்குக்கும் இடையில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்று ஏற்கனவே இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.அதுமட்டுமன்றி, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எந்த நாட்டவரும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும், ருவாண்டாவுக்கு அனுப்பி, அங்குவைத்து அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பது ருவாண்டா திட்டத்தின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு புகலிடக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள், ருவாண்டாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்களே தவிர, மீண்டும் பிரித்தானியாவுக்குள் செல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வாறு பிரித்தானியாவில் வாழும் கனவில் செல்வோருக்கு, இறுதியில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாழும் நிலையே ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement