• Sep 20 2024

உள்ளூர் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் - மூவர் கைது

Anaath / Jul 30th 2024, 12:22 pm
image

Advertisement

திருகோணமலை குச்சவெளி பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதேசம் தெகிவளை பகுதியில் இருந்து புறா தீவுக்கு சுற்றுலா செய்ய இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 60 , 40 வயது மற்றும் 45 வயது படகு உரிமையாளர்களே இவ்வாறு குச்சவெளி பொலிஸார் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

குறித்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நிலாவளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் கடந்த 27 ஆம் திகதி  மாலை இடம் பெற்றுள்ளதுடன் இது சம்பந்தமான நடவடிக்கையை 28ஆம் திகதி எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை 29 ஆம் திகதி காலை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியதாகவும் ஆஜர் படுத்தியவர்களில் ஒருவர் கடுமையான இருதய நோயாளி என தெரிவித்து அவருக்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

00:00

உள்ளூர் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் - மூவர் கைது திருகோணமலை குச்சவெளி பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிசார் தெரிவித்தனர்.கொழும்பு பிரதேசம் தெகிவளை பகுதியில் இருந்து புறா தீவுக்கு சுற்றுலா செய்ய இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 60 , 40 வயது மற்றும் 45 வயது படகு உரிமையாளர்களே இவ்வாறு குச்சவெளி பொலிஸார் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். குறித்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நிலாவளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் கடந்த 27 ஆம் திகதி  மாலை இடம் பெற்றுள்ளதுடன் இது சம்பந்தமான நடவடிக்கையை 28ஆம் திகதி எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை 29 ஆம் திகதி காலை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியதாகவும் ஆஜர் படுத்தியவர்களில் ஒருவர் கடுமையான இருதய நோயாளி என தெரிவித்து அவருக்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement