நடுவீதியில் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இரண்டு இளைஞர்கள் கிரிபத்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் கிரிபத்கொடை நகரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாகொல மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
நடுவீதியில் இளைஞர்கள் இருவர் இணைந்து நபரொருவரை தாக்கும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த காணொளி கிரிபத்கொடை நகரத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், தாக்குதலுக்குள்ளானவர் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான தனியார் நிறுவன உரிமையாளர் வேலை நிமித்தம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருடன் தனது காரில் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் காதலனுக்கும் தனியார் நிறுவன உரிமையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த பெண்ணின் காதலன் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து தனியார் நிறுவன உரிமையாளரை கிரிபத்கொடை நகரத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (26) பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர்களான காதலனும் இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடுவீதியில் தனியார் நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல்; சிக்கிய இரு இளைஞர்கள் நடுவீதியில் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இரண்டு இளைஞர்கள் கிரிபத்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவம் கிரிபத்கொடை நகரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாகொல மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது, நடுவீதியில் இளைஞர்கள் இருவர் இணைந்து நபரொருவரை தாக்கும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த காணொளி கிரிபத்கொடை நகரத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், தாக்குதலுக்குள்ளானவர் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் என தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான தனியார் நிறுவன உரிமையாளர் வேலை நிமித்தம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருடன் தனது காரில் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் காதலனுக்கும் தனியார் நிறுவன உரிமையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பெண்ணின் காதலன் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து தனியார் நிறுவன உரிமையாளரை கிரிபத்கொடை நகரத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (26) பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.இதனையடுத்து சந்தேக நபர்களான காதலனும் இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.