• Aug 27 2025

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கவனயீர்ப்பு; 3111 வது நாளான இன்று- வவுனியாவில் ஊர்வலம்!

shanuja / Aug 27th 2025, 4:13 pm
image

வடக்கு கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தினர், 

இன்று காலை கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர். 


வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்கள் 3111 வது நாளான இன்று குறித்த ஊர்வலத்தினை ஏற்பாடு செய்தனர். 


வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பமான இந்த ஊர்வலம் மணிக்கூட்டுச் சந்தி வழியாக ஏ9 வீதியை அடைந்து அவர்களுடைய போராட்ட பந்தலை  அடைந்தது. 


அங்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தமது போராட்டத்தினை நிறைவு செய்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கவனயீர்ப்பு; 3111 வது நாளான இன்று- வவுனியாவில் ஊர்வலம் வடக்கு கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தினர், இன்று காலை கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்கள் 3111 வது நாளான இன்று குறித்த ஊர்வலத்தினை ஏற்பாடு செய்தனர். வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பமான இந்த ஊர்வலம் மணிக்கூட்டுச் சந்தி வழியாக ஏ9 வீதியை அடைந்து அவர்களுடைய போராட்ட பந்தலை  அடைந்தது. அங்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தமது போராட்டத்தினை நிறைவு செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement