இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, கராஜ் மற்றும் தெஹ்ரான் நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.
கராஜ் நகருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு மாவட்டத்தில் கார்கள் தங்கள் ஹாரன்களை ஒலித்து, தெருவில் ஒரு குழு குடியிருப்பாளர்கள் நடனமாடி ஆரவாரம் செய்யும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
மேற்கே தெஹ்ரானில் உள்ள எக்படன் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்களிலிருந்து ஆரவாரம் செய்து கைதட்டுவதை காணகூடியதாகவுள்ளது.
மற்றொரு காணொளியில், ஒருவர் "நான் கனவு காண்கிறேன், வணக்கம் புதிய உலகம்!" என்று கத்துவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் காமனெயி மரணத்திற்கு ஈரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் "வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி." என அமெரிக்க அதிபர் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அயதுல்லா அலி கமேனி மரணம்; கொண்டாடித்தீர்த்த ஈரான் மக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, கராஜ் மற்றும் தெஹ்ரான் நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன. கராஜ் நகருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு மாவட்டத்தில் கார்கள் தங்கள் ஹாரன்களை ஒலித்து, தெருவில் ஒரு குழு குடியிருப்பாளர்கள் நடனமாடி ஆரவாரம் செய்யும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. மேற்கே தெஹ்ரானில் உள்ள எக்படன் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்களிலிருந்து ஆரவாரம் செய்து கைதட்டுவதை காணகூடியதாகவுள்ளது.மற்றொரு காணொளியில், ஒருவர் "நான் கனவு காண்கிறேன், வணக்கம் புதிய உலகம்" என்று கத்துவதையும் காணக்கூடியதாகவுள்ளது.இந்நிலையில் காமனெயி மரணத்திற்கு ஈரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் தெரிவித்துள்ளார்.மேலும் "வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி." என அமெரிக்க அதிபர் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.