வவுனியாவில் சபரிவாசன் தீர்த்த யாத்திரைக்குழவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.
வவுனியா கூமாங்குளத்தில் சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவினரால் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு விசேட அபிசேக ஆரதனைகளும், தீபாராதனைகளும் இடம்பெற்றிருந்ததுடன் ஆனந்தமிகு ஐயப்ப பயனையும் இடம்பெற்றிருந்தது.
இவ் மண்டல பூஜை நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த குருசாமிகள், நூற்றுக்கணக்கான ஐயப்ப சாமிகள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை வருகின்ற 04.01.2019 அன்று சபரிமலைக்கு சுவாமிமார்கள் செல்ல இருப்பதனால் இரவு 7.30 மணிக்கு சபரிவாசனுக்கு விசேட பூஜைகள், தீபாராதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.