2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடிக் கடற்கரையில் பட்டத் திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது.
இப் போட்டியில் தனியாகவும் குழுவாகவும் போட்டியாளர்கள் பங்குபற்றினர்.
இப் போட்டியானது மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.தனஞ்ஜெயன்
தலைமையில் இடம்பெற்றது.
இப் போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசில்கள் அரச அதிபரால் வழங்கப்பட்டன.
புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் எமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பட்டங்களை கருத்திற் கொண்டு வெற்றியாளர்கள் சுயாதீன நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப் பட்டத் திருவிழாவினை காண அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், 20 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் தமது பட்டங்களை போட்டியில் இணைத்துக்கொள்வதற்காக ஆர்வர் காட்டியதுடன், மட்டக்களப்பு தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தினால் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட வாக்குப் பெட்டி வடிவிலான அழகிய பட்டம் ஒன்று வானில் பறக்கவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வானில் பறந்த வாக்குப்பெட்டி - மட்டக்களப்பில் நடந்தது என்ன 2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடிக் கடற்கரையில் பட்டத் திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் தனியாகவும் குழுவாகவும் போட்டியாளர்கள் பங்குபற்றினர்.இப் போட்டியானது மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.தனஞ்ஜெயன்தலைமையில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார். போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசில்கள் அரச அதிபரால் வழங்கப்பட்டன. புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் எமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பட்டங்களை கருத்திற் கொண்டு வெற்றியாளர்கள் சுயாதீன நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப் பட்டத் திருவிழாவினை காண அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், 20 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் தமது பட்டங்களை போட்டியில் இணைத்துக்கொள்வதற்காக ஆர்வர் காட்டியதுடன், மட்டக்களப்பு தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தினால் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட வாக்குப் பெட்டி வடிவிலான அழகிய பட்டம் ஒன்று வானில் பறக்கவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.