நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் மூலம் இங்குள்ள அரசியற் கட்சிகளுக்கு மறைமுகமாக நிதி வழங்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றது, அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது, எந்த நாட்டில் இருந்து அனுப்படுகின்றது, எந்த அமைப்புகளிடமிருந்து வந்திருக்கின்றது என்பதை விசாரிப்பதற்குரிய எந்தவொரு அமைப்பும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
நாட்டில் ஏற்படுகின்ற போராட்டங்கள், ஆட்சி மாற்றத்துக்குரிய சதி முயற்சிகள் , பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றுக்கு கூட கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகள் பயன்படுத்தப்படக்கூடும்.
எனவே, கட்சிகளுக்கு வரும் நிதியை ஆராய்வதற்காக ஒரு சட்டமூலம் உயரிய சபையில் கொண்டுவரப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லாததால் அந்த நிதியை வைத்து நாட்டைக் குழப்புவதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அரசியற் கட்சிகளுக்கு நிதி-கோடீஸ்வரன் எம்.பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் மூலம் இங்குள்ள அரசியற் கட்சிகளுக்கு மறைமுகமாக நிதி வழங்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றது, அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது, எந்த நாட்டில் இருந்து அனுப்படுகின்றது, எந்த அமைப்புகளிடமிருந்து வந்திருக்கின்றது என்பதை விசாரிப்பதற்குரிய எந்தவொரு அமைப்பும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.நாட்டில் ஏற்படுகின்ற போராட்டங்கள், ஆட்சி மாற்றத்துக்குரிய சதி முயற்சிகள் , பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றுக்கு கூட கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகள் பயன்படுத்தப்படக்கூடும். எனவே, கட்சிகளுக்கு வரும் நிதியை ஆராய்வதற்காக ஒரு சட்டமூலம் உயரிய சபையில் கொண்டுவரப்பட வேண்டும்.அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லாததால் அந்த நிதியை வைத்து நாட்டைக் குழப்புவதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.