வட்டக்கச்சி மாவவனூர் பகுதியில் வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று இரவு குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
update - கடும் மழை காரணமாக வீட்டுக்கு அருகில் இருந்த கால்வாயில் தவறி விழுந்த 64 வயதுடைய பாலசிங்கம் கிருஸ்னேஸ்வரன் என்னும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.