கொழும்பு துறைமுக நகரத்தின் கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படையின் அதிகாரிகள் இன்று (27) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21/22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மாணவனின் உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு போர்ட் சிட்டி கடலில் மூழ்கிய பல்கலை மாணவனின் சடலம் மீட்பு கொழும்பு துறைமுக நகரத்தின் கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படையின் அதிகாரிகள் இன்று (27) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21/22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார். மாணவனின் உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.