• Sep 21 2024

பாக்கு மரத்தை வெட்ட மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

Chithra / Sep 9th 2024, 12:03 pm
image

Advertisement


பாக்கு மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த  சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.

கல்பொத்தபதன பரமங்கட, பசறை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக குறித்த சிறுவன் பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தை வெட்டும் போது கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

இந் நிலையில் சிறுவன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பாக்கு மரத்தை வெட்ட மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம் பாக்கு மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த  சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.கல்பொத்தபதன பரமங்கட, பசறை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக குறித்த சிறுவன் பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தை வெட்டும் போது கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.இந் நிலையில் சிறுவன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதனையடுத்து, அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement