• May 21 2024

விருந்துபசார நிகழ்வில் வெடித்த தகராறு..! 12 பல்கலை மாணவர்கள் கைது

Chithra / May 1st 2024, 3:11 pm
image

Advertisement

 

ஹோமாகம பிரதேசத்தில்  பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 12 பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும், பட்டப்படிப்பு முடித்த பழைய மாணவர்களும் இணைந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (30) விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது பல்கலைக்கழக  மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதுடன்,

குறித்த ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மாணவர்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த பல்கலை மாணவர்களுக்கும் ஹோட்டல் பணியாளர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

இதனையடுத்து 12 பல்கலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

விருந்துபசார நிகழ்வில் வெடித்த தகராறு. 12 பல்கலை மாணவர்கள் கைது  ஹோமாகம பிரதேசத்தில்  பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 12 பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.ஹோமாகம பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும், பட்டப்படிப்பு முடித்த பழைய மாணவர்களும் இணைந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (30) விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.இந்நிகழ்வின் போது பல்கலைக்கழக  மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதுடன்,குறித்த ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மாணவர்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.இதன்போது அங்கிருந்த பல்கலை மாணவர்களுக்கும் ஹோட்டல் பணியாளர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.இதனையடுத்து 12 பல்கலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement