• Mar 29 2025

போர்க்குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை நபர்கள் மீது தடைவிதித்துள்ள பிரிட்டன்: உலகளாவிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் வரவேற்பு..!

Sharmi / Mar 26th 2025, 11:41 am
image

இலங்கையின் போர்க்கால இராணுவத் தளபதிகள் மூவர் மீதும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் துணை இராணுவக்குழுத் தலைவர் ஒருவர் மீதும் மக்னஸ்கி சட்டத்தின்கீழ் பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ள இந்த ஆச்சரியமான முடிவினை பாதிக்கப்பட்டவர்களும் உலகளாவிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.

'இப்போது எனது உணர்வுகள் எப்படி உள்ளன என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாதுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், உள்நாட்டிற்குள் நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையினை நான் இழந்து கொண்டிருந்தேன்.

ஆனால், இவ்விடயங்களுக்காகப் போராடிவரும் ஒரு சட்டவாளராகிய எனக்கு இது ஒரு நம்பிக்கை கீற்றினைத் தந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் சிறிய சந்தோசத்தினைக் இது கொடுக்கும். எமது போராட்டத்தினை நாங்கள் கைவிடப்போவதில்லை' இவ்வாறு வட இலங்கையியைச் சேர்ந்த மனித உரிமைகள் தொடர்பான சட்டவாளர் ஒருவர் தெரிவித்தார்.

'ஒவ்வொரு போர்க்குற்றவாளிகளும் கொலை, காணாமல்போகச்செய்தல் போன்ற பாரதூரமான வன்முறைகளில் ஈடுபட்டவர்களும் பொறுப்புக்கூறலுக்கு ஆளாக்கப்படுதல் வேண்டும். இந்தச் செய்தியானது என்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கும் எமது குடும்பங்களுக்கும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுவதற்கான சிறு நம்பிக்கையைக் கொடுக்கின்றது' என சிறிலங்காவிலிருந்து தப்பி வெளிநாட்டில் வசிக்கும் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.

சவேந்திர சில்வா

இந்த ஆண்டு ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, சட்டவிரோதக் கொலைகள், சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவப் படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமைதாங்கி வழிநடாத்தியதாக பிரித்தானிய அரசாங்கம் இணையத்தில் வெளியிட்ட தடைப்பட்டியிலில் கூறப்பட்டுள்ளது. மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்ட பிரித்தானிய அரசாங்கத்தின் அவ்வறிக்கையில் படுகொலைகளைச் செய்வதற்கு சவேந்திர சில்வா கட்டளை பிறப்பித்ததாக நேரடியாகக் குற்றச்சாட்டியுள்ளது:

'சரணடைய முயன்ற விடுதலைப்புலித் தலைவர்கள் கொல்லப்படவேண்டுமென ஆணை பிறப்பித்ததுடன், போரின் இறுதி நாட்களில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை இவரது தலைமையிலான படையினர் கொலைசெய்த காலப்பகுதியில் இவர் களமுனையிலும் இருந்துள்ளார்.

'வெள்ளைக்கொடிச் சம்பவம்' என்று அறியப்படும் சம்பவத்தினை இது குறிக்கின்றது. இச்சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை உறுப்பினர்கள், சரணடையுமாறு தூண்டப்பட்டு, நீதிக்குப் புறம்பான முறையில் கொல்லப்பட்டார்கள். ஐ.நா. மேற்கொண்ட விசாரணையும், இத்தலைவர்கள் (ஒருவருடைய மனைவி உட்பட) அங்கிருந்த மூத்த இராணுவத் தலைமைப்பீடத்தின் கட்டளையின்கீழ் படைவீரர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதென முடிவுசெய்துள்ளது.

இச்சரணடைவு தொடர்பில் 2015 ஆம் ஆண்டில் முதன்முதலாக ITJP வெளிக்கொண்டுவந்ததுடன்,2019இல் சவேந்திர சில்வா தொடர்பாக ஆவணம் ஒன்றினையும் வெளியிட்டது. 2021 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கும் கனடாவிற்கும் விபரமான தடைக்கோவைகளையும் இது அனுப்பி வைத்திருந்தது.

'பாதிக்கப்பட்டவர்களதும் அவர்களது குடும்பங்களதும் இரத்தமும், வியர்வையும், கண்ணீரும் வீணாகிப்போகவில்லை. போர்க்குற்றவாளிகளை அவர்களது கொடூர அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறவைப்பதனை நோக்கிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பிரித்தானிய அரசாங்கத்திற்கு நன்றிகள்' இவ்வாறு போரிலிருந்து உயிர்தப்பி தற்போது பிரித்தானியாவில் வாழும் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.

ஜகத் ஜெயசூரிய

ஜகத் ஜெயசூரிய மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ITJP யானது, இவருக்கு எதிராக 2017 ஆம் ஆண்டில், உலகளாவிய அதிகார வரம்பு வழக்குகளை இலத்தின் அமெரிக்காவில் தாக்கல் செய்தது. சித்திரவதைக்கும், பாலியல் வன்முறைகளுக்கும்2 பெயர்போன ஜோசப் முகாம்3 எனப்படும் இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தமை தொடர்பிலேயே இவர்மீது வழக்குகள் தொடரப்பட்டன.

அந்நேரத்தில் இலங்கையின் இராஜதந்திரியாக இருந்த அவர், இதன்விளைவாக பிரேஸிலிருந்து தப்பி, இலங்கைக்கே திரும்பியிருந்தார். 2019 ஆம் ஆண்டு, இரண்டு முறை இவர் அவுஸ்ரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையத்துடன்4 இணைந்து, 2020 ஆண்டு, ITJP  இவர் தொடர்பில் அவுஸ்ரேலிய மத்திய காவல்துறைக்கு5 முறைப்பாடு செய்தது. 

எனினும், இலங்கைக்கு உள்ளேயே விசாரணை நடைபெறுவதையே6 தாம் விரும்புவதால் இம்முறைப்பாடு தொடர்பில் தாம் விசாரணை நடாத்தமாட்டோமென 2022ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய காவல்துறை தெரிவித்தது. அதே ஆண்டில், ஜெயசூரிய தொடர்பான 100 பக்கங்களைக் கொண்ட தடை ஆவணம் ஒன்றினை ஐவுதுP பிரித்தானிய அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்தது. பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஒரு ஆவணத்தினை அனுப்பி வைத்தது. 

வசந்த கரன்னகொட

போர்க்காலத்தில் சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாகவும் -இராஜதந்தியாகவும் இருந்த வசந்த கரன்னகொடவும் தடைசெய்யப்பட்டுள்ளார். இதர விடயங்களுடன், கிழக்குக்கரையோரத்தில் உள்ள பிரதான கடற்படை முகாமில் நிலக்கீழ் சித்திரவதைக் கூடங்களை வைத்திருந்ததுடன், போர் நடந்த நேரத்திலும், அதற்குப் பின்னரும், பல எண்ணிக்கையிலான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதும் இங்கே நிகழ்ந்தன.

'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் பல ஆண்டுகளாக நீதிவேண்டிக் காத்துக்கிடக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தின் இச்செயற்பாடு, எமது துன்பங்களை அங்கீகரிப்பதாகவும், உலகம் பார்த்துக்கொண்டிருப்பதற்கான சான்றாகவும் உள்ளது. ஆயினும் எமக்கு நீதிவேண்டும், இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலுக்கு  ஆளாக்கும்போதுதான் இது கிடைக்கும்' என இலங்கைக் கடற்படையால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய, தற்போது ஐரோப்பாவில் வாழும் ஒரு உறவினர் தெரிவித்தார்.

கடற்படைப் புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்ட பிள்ளையின் தாயார் ஒருவர் கூறும்போது,

'இது மிகவும் நல்ல செய்தி, இது எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. ஆனால், எங்கள் அரசங்கத்தைப் பற்றிய சந்தேகங்கள் எமக்கு இப்போதும் இருப்பதால், நான் நினைப்பதை என்னால் வெளிப்படையாகக் கூறமுடியாது' என்று தெரிவித்தார். 

கருணா

ஒரு தமிழ் துணை ஆயுதக்குழுத் தலைவரான கருணா என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் தடைசெய்யப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு கடவுச்சீட்டு மோசடிக்காக7 பிரித்தானியாவில் இவர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். போர்க்குற்றங்களுக்கான அவர் மீது விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதிலும், அந்நேரத்தில் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, இராணுவத்துடன் இணைந்துகொண்ட கருணாவின் படைகள், கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர் ஆட்சேர்ப்பு, கடத்தல், கொலைகள், சித்திரவதை மற்றும் மிரட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

'காலதாமதமானாலும் இறுதியில் நீதி கிடைக்கும் என்பதுடன் இப்போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு ஆளாக்கப்படுவார்கள் - இவர்கள் இழைத்த கொடிய பாவங்களுக்கான  தண்டனையிலிருந்து அவர்களால் தப்பமுடியாது என்ற வலுவான செய்தியினை போர்க்குற்றவாளிகளுக்கு இத்தடைகள் வழங்கும்' என சித்திரவதையிலிருந்து உயிர்தப்பிய தமிழர் ஒருவர் கூறினார்.

தாக்கம்

இத்தடைகள் 2020ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தடைகளுக்கான ஒழுங்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. பட்டியலிடப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக நிதி, இயக்குனர் தகுதிநீக்கம், மற்றும் குடிவரவுத் தடைகள் விதிக்கப்படுகின்றன. பிரித்தானியாவின் தடைப்பட்டியலில் கூறப்பட்டுள்ளதன் படி, நான்கு இலங்கைப் பிரஜைகள் மீது நிதி மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்படுகின்றன. இலக்கு வைக்கப்பட்ட சொத்து முடக்கங்கள் என்பதில் பண மற்றும் இதர சொத்துக்களை (எ.கா. சொத்து அல்லது வாகனங்கள்) முடக்குவது மற்றும் அவர்களுக்கு எந்த சொத்துக்களும் கிடைக்கமாட்டாது என்பதை உறுதிப்படுத்துவது என்பன உள்ளடங்கும். மேலும் தடை செய்யப்பட்ட நபர்கள் இங்கிலாந்தில் நுழையவோ அல்லது வசிக்கவோ முடியாது என்பதுடன் - இடைத்தங்கல் உட்பட, இங்கிலாந்துக்கு பயண விசா விண்ணப்பமும் மறுக்கப்படும். மேலும், நிதித் தடைகளை மீறுவது ஒரு குற்றவியல் குற்றமாகும்.

'பல ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போர்க்குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தஞ்சம் புகுந்துள்ள நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவினால் இவர்கள் பற்றிய உண்மை இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையிட்டு நாம் மகிழ்வடைந்துள்ளோம். கடந்த ஒரு தசாப்தமாக இவர்களைப் பற்றிய ஆதாரங்களை நாம் தொகுத்து வந்துள்ளோம். ஆனால், இவர்களுக்கு எதிரான வாக்குமூலங்களை வழங்கிய பாதிக்கப்பட்டவர்களையும், பல வருடங்களாக அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் நீதிக்காப் போராடிவந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த தனிபர்களையுமே இதற்குரிய பெருமை சென்றடைய வேண்டும்' இவ்வாறு ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார








போர்க்குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை நபர்கள் மீது தடைவிதித்துள்ள பிரிட்டன்: உலகளாவிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் வரவேற்பு. இலங்கையின் போர்க்கால இராணுவத் தளபதிகள் மூவர் மீதும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் துணை இராணுவக்குழுத் தலைவர் ஒருவர் மீதும் மக்னஸ்கி சட்டத்தின்கீழ் பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ள இந்த ஆச்சரியமான முடிவினை பாதிக்கப்பட்டவர்களும் உலகளாவிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.'இப்போது எனது உணர்வுகள் எப்படி உள்ளன என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாதுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், உள்நாட்டிற்குள் நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையினை நான் இழந்து கொண்டிருந்தேன். ஆனால், இவ்விடயங்களுக்காகப் போராடிவரும் ஒரு சட்டவாளராகிய எனக்கு இது ஒரு நம்பிக்கை கீற்றினைத் தந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் சிறிய சந்தோசத்தினைக் இது கொடுக்கும். எமது போராட்டத்தினை நாங்கள் கைவிடப்போவதில்லை' இவ்வாறு வட இலங்கையியைச் சேர்ந்த மனித உரிமைகள் தொடர்பான சட்டவாளர் ஒருவர் தெரிவித்தார்.'ஒவ்வொரு போர்க்குற்றவாளிகளும் கொலை, காணாமல்போகச்செய்தல் போன்ற பாரதூரமான வன்முறைகளில் ஈடுபட்டவர்களும் பொறுப்புக்கூறலுக்கு ஆளாக்கப்படுதல் வேண்டும். இந்தச் செய்தியானது என்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கும் எமது குடும்பங்களுக்கும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுவதற்கான சிறு நம்பிக்கையைக் கொடுக்கின்றது' என சிறிலங்காவிலிருந்து தப்பி வெளிநாட்டில் வசிக்கும் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.சவேந்திர சில்வாஇந்த ஆண்டு ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, சட்டவிரோதக் கொலைகள், சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவப் படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமைதாங்கி வழிநடாத்தியதாக பிரித்தானிய அரசாங்கம் இணையத்தில் வெளியிட்ட தடைப்பட்டியிலில் கூறப்பட்டுள்ளது. மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்ட பிரித்தானிய அரசாங்கத்தின் அவ்வறிக்கையில் படுகொலைகளைச் செய்வதற்கு சவேந்திர சில்வா கட்டளை பிறப்பித்ததாக நேரடியாகக் குற்றச்சாட்டியுள்ளது:'சரணடைய முயன்ற விடுதலைப்புலித் தலைவர்கள் கொல்லப்படவேண்டுமென ஆணை பிறப்பித்ததுடன், போரின் இறுதி நாட்களில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை இவரது தலைமையிலான படையினர் கொலைசெய்த காலப்பகுதியில் இவர் களமுனையிலும் இருந்துள்ளார்.'வெள்ளைக்கொடிச் சம்பவம்' என்று அறியப்படும் சம்பவத்தினை இது குறிக்கின்றது. இச்சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை உறுப்பினர்கள், சரணடையுமாறு தூண்டப்பட்டு, நீதிக்குப் புறம்பான முறையில் கொல்லப்பட்டார்கள். ஐ.நா. மேற்கொண்ட விசாரணையும், இத்தலைவர்கள் (ஒருவருடைய மனைவி உட்பட) அங்கிருந்த மூத்த இராணுவத் தலைமைப்பீடத்தின் கட்டளையின்கீழ் படைவீரர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதென முடிவுசெய்துள்ளது.இச்சரணடைவு தொடர்பில் 2015 ஆம் ஆண்டில் முதன்முதலாக ITJP வெளிக்கொண்டுவந்ததுடன்,2019இல் சவேந்திர சில்வா தொடர்பாக ஆவணம் ஒன்றினையும் வெளியிட்டது. 2021 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கும் கனடாவிற்கும் விபரமான தடைக்கோவைகளையும் இது அனுப்பி வைத்திருந்தது.'பாதிக்கப்பட்டவர்களதும் அவர்களது குடும்பங்களதும் இரத்தமும், வியர்வையும், கண்ணீரும் வீணாகிப்போகவில்லை. போர்க்குற்றவாளிகளை அவர்களது கொடூர அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறவைப்பதனை நோக்கிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பிரித்தானிய அரசாங்கத்திற்கு நன்றிகள்' இவ்வாறு போரிலிருந்து உயிர்தப்பி தற்போது பிரித்தானியாவில் வாழும் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.ஜகத் ஜெயசூரியஜகத் ஜெயசூரிய மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ITJP யானது, இவருக்கு எதிராக 2017 ஆம் ஆண்டில், உலகளாவிய அதிகார வரம்பு வழக்குகளை இலத்தின் அமெரிக்காவில் தாக்கல் செய்தது. சித்திரவதைக்கும், பாலியல் வன்முறைகளுக்கும்2 பெயர்போன ஜோசப் முகாம்3 எனப்படும் இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தமை தொடர்பிலேயே இவர்மீது வழக்குகள் தொடரப்பட்டன.அந்நேரத்தில் இலங்கையின் இராஜதந்திரியாக இருந்த அவர், இதன்விளைவாக பிரேஸிலிருந்து தப்பி, இலங்கைக்கே திரும்பியிருந்தார். 2019 ஆம் ஆண்டு, இரண்டு முறை இவர் அவுஸ்ரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையத்துடன்4 இணைந்து, 2020 ஆண்டு, ITJP  இவர் தொடர்பில் அவுஸ்ரேலிய மத்திய காவல்துறைக்கு5 முறைப்பாடு செய்தது. எனினும், இலங்கைக்கு உள்ளேயே விசாரணை நடைபெறுவதையே6 தாம் விரும்புவதால் இம்முறைப்பாடு தொடர்பில் தாம் விசாரணை நடாத்தமாட்டோமென 2022ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய காவல்துறை தெரிவித்தது. அதே ஆண்டில், ஜெயசூரிய தொடர்பான 100 பக்கங்களைக் கொண்ட தடை ஆவணம் ஒன்றினை ஐவுதுP பிரித்தானிய அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்தது. பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஒரு ஆவணத்தினை அனுப்பி வைத்தது. வசந்த கரன்னகொடபோர்க்காலத்தில் சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாகவும் -இராஜதந்தியாகவும் இருந்த வசந்த கரன்னகொடவும் தடைசெய்யப்பட்டுள்ளார். இதர விடயங்களுடன், கிழக்குக்கரையோரத்தில் உள்ள பிரதான கடற்படை முகாமில் நிலக்கீழ் சித்திரவதைக் கூடங்களை வைத்திருந்ததுடன், போர் நடந்த நேரத்திலும், அதற்குப் பின்னரும், பல எண்ணிக்கையிலான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதும் இங்கே நிகழ்ந்தன.'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் பல ஆண்டுகளாக நீதிவேண்டிக் காத்துக்கிடக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தின் இச்செயற்பாடு, எமது துன்பங்களை அங்கீகரிப்பதாகவும், உலகம் பார்த்துக்கொண்டிருப்பதற்கான சான்றாகவும் உள்ளது. ஆயினும் எமக்கு நீதிவேண்டும், இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலுக்கு  ஆளாக்கும்போதுதான் இது கிடைக்கும்' என இலங்கைக் கடற்படையால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய, தற்போது ஐரோப்பாவில் வாழும் ஒரு உறவினர் தெரிவித்தார்.கடற்படைப் புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்ட பிள்ளையின் தாயார் ஒருவர் கூறும்போது, 'இது மிகவும் நல்ல செய்தி, இது எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. ஆனால், எங்கள் அரசங்கத்தைப் பற்றிய சந்தேகங்கள் எமக்கு இப்போதும் இருப்பதால், நான் நினைப்பதை என்னால் வெளிப்படையாகக் கூறமுடியாது' என்று தெரிவித்தார். கருணாஒரு தமிழ் துணை ஆயுதக்குழுத் தலைவரான கருணா என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் தடைசெய்யப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு கடவுச்சீட்டு மோசடிக்காக7 பிரித்தானியாவில் இவர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். போர்க்குற்றங்களுக்கான அவர் மீது விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதிலும், அந்நேரத்தில் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, இராணுவத்துடன் இணைந்துகொண்ட கருணாவின் படைகள், கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர் ஆட்சேர்ப்பு, கடத்தல், கொலைகள், சித்திரவதை மற்றும் மிரட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.'காலதாமதமானாலும் இறுதியில் நீதி கிடைக்கும் என்பதுடன் இப்போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு ஆளாக்கப்படுவார்கள் - இவர்கள் இழைத்த கொடிய பாவங்களுக்கான  தண்டனையிலிருந்து அவர்களால் தப்பமுடியாது என்ற வலுவான செய்தியினை போர்க்குற்றவாளிகளுக்கு இத்தடைகள் வழங்கும்' என சித்திரவதையிலிருந்து உயிர்தப்பிய தமிழர் ஒருவர் கூறினார்.தாக்கம்இத்தடைகள் 2020ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தடைகளுக்கான ஒழுங்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. பட்டியலிடப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக நிதி, இயக்குனர் தகுதிநீக்கம், மற்றும் குடிவரவுத் தடைகள் விதிக்கப்படுகின்றன. பிரித்தானியாவின் தடைப்பட்டியலில் கூறப்பட்டுள்ளதன் படி, நான்கு இலங்கைப் பிரஜைகள் மீது நிதி மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்படுகின்றன. இலக்கு வைக்கப்பட்ட சொத்து முடக்கங்கள் என்பதில் பண மற்றும் இதர சொத்துக்களை (எ.கா. சொத்து அல்லது வாகனங்கள்) முடக்குவது மற்றும் அவர்களுக்கு எந்த சொத்துக்களும் கிடைக்கமாட்டாது என்பதை உறுதிப்படுத்துவது என்பன உள்ளடங்கும். மேலும் தடை செய்யப்பட்ட நபர்கள் இங்கிலாந்தில் நுழையவோ அல்லது வசிக்கவோ முடியாது என்பதுடன் - இடைத்தங்கல் உட்பட, இங்கிலாந்துக்கு பயண விசா விண்ணப்பமும் மறுக்கப்படும். மேலும், நிதித் தடைகளை மீறுவது ஒரு குற்றவியல் குற்றமாகும்.'பல ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போர்க்குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தஞ்சம் புகுந்துள்ள நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவினால் இவர்கள் பற்றிய உண்மை இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையிட்டு நாம் மகிழ்வடைந்துள்ளோம். கடந்த ஒரு தசாப்தமாக இவர்களைப் பற்றிய ஆதாரங்களை நாம் தொகுத்து வந்துள்ளோம். ஆனால், இவர்களுக்கு எதிரான வாக்குமூலங்களை வழங்கிய பாதிக்கப்பட்டவர்களையும், பல வருடங்களாக அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் நீதிக்காப் போராடிவந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த தனிபர்களையுமே இதற்குரிய பெருமை சென்றடைய வேண்டும்' இவ்வாறு ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார

Advertisement

Advertisement

Advertisement