யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று இன்றைய தினம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடு இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் மற்றும், அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த மூன்று பெண்களும் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் தங்கியிருந்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர். பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நாவற்குழிப் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை- மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று இன்றைய தினம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடு இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் மற்றும், அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த மூன்று பெண்களும் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் தங்கியிருந்துள்ளனர்.அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர். பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது