மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட தொழிலாளர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று(01) காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை சுமார் 200 ஆண், பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாட்டில் சகல பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்ந்த வண்ணம் உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியபடி எமக்கு 1700/= வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தே இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.