திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இன்று சனிக்கிழமை (10) காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த 6 ஆம் திகதி அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்டிருந்த நிலையில் மற்றுமொறு சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலையில் புத்தர்சிலை திருட்டு திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இன்று சனிக்கிழமை (10) காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த 6 ஆம் திகதி அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்டிருந்த நிலையில் மற்றுமொறு சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.