• Oct 18 2024

தமிழர் பகுதியில் திடீரென வந்து அமர்ந்த புத்தர் சிலையால் பரபரப்பு! தொடரும் சிங்கள ஆதிக்கம் samugammedia

Chithra / Apr 9th 2023, 4:06 pm
image

Advertisement

வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09.04) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  

செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  


குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பகுதியில் தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வருவதுடன், குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அண்மித்ததாக செட்டிகுளம் முருகன் கோவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


தமிழர் பகுதியில் திடீரென வந்து அமர்ந்த புத்தர் சிலையால் பரபரப்பு தொடரும் சிங்கள ஆதிக்கம் samugammedia வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09.04) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.குறித்த பகுதியில் தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வருவதுடன், குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அண்மித்ததாக செட்டிகுளம் முருகன் கோவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement