தேசிய மக்கள் சக்தியினரால் கடந்த தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு அமைய பாதீடு முன்வைக்கப்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட விவாதம் இன்றையதினம் பாராளுமன்றில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய விடயங்கள் அனைத்தையும் மறந்து அரசாங்கம் செயற்பட்டு வருகின்றனர்.
நாட்டில் தற்போது சமூக செலவீனங்கள் அதிகரித்துள்ளது. மக்கள் தலையில் எல்லையற்ற சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மக்கள் ஆணையை முற்றுமுழுதாக அரசாங்கம் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, வரலாற்று ரீதியான மற்றுமொரு தவறு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாதையிலேயே தற்போதைய அரசாங்கமும் பயணிக்கின்றது.
அத்துடன் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவோம் எனப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அதற்காகத் தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்று மீண்டும் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்றும், 2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவது என்றால் பொருளாதார வளர்ச்சி உயர்மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
1975 ஆண்டு முதல் இதுவரை IMF 75 நாடுகளில் செயற்படுத்திய திட்டங்களில் 59 சதவீதமானவை 2 ஆம் 3 ஆம் 4 ஆம் கடன் மறுசீரமைப்புக்கு செல்ல நேரிட்டது.
இது பாரதூரமான அழிவாக அமையும் என்றும் இதனை யாரும் வெளியில் சொல்வதில்லை எனவும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடனை திருப்பிச் செலுத்தவும் முயற்சிக்கும் அரசாங்கம் எவ்வாறு அரச வருமானத்தை அதிகரிப்பது என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவில்லை.
இது தொடர்பில் தற்போது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்கள் வெறுமனே கற்பனை விடயங்களாகவே தம்மால் பார்க்க முடியும்.
எனவே அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேநேரம் மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர் கடந்த நாட்களில் வழங்கப்படாமல் இருக்கும் அந்த தொகையை வழங்குமாறும் வலியுறுத்தினார்.
தேர்தல் கால வாக்குறுதிகளுக்கு அமைய பாதீடு முன்வைக்கப்படவில்லை; சபையில் சஜித் சுட்டிக்காட்டு. தேசிய மக்கள் சக்தியினரால் கடந்த தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு அமைய பாதீடு முன்வைக்கப்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.வரவு செலவு திட்ட விவாதம் இன்றையதினம் பாராளுமன்றில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய விடயங்கள் அனைத்தையும் மறந்து அரசாங்கம் செயற்பட்டு வருகின்றனர்.நாட்டில் தற்போது சமூக செலவீனங்கள் அதிகரித்துள்ளது. மக்கள் தலையில் எல்லையற்ற சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை, மக்கள் ஆணையை முற்றுமுழுதாக அரசாங்கம் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, வரலாற்று ரீதியான மற்றுமொரு தவறு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாதையிலேயே தற்போதைய அரசாங்கமும் பயணிக்கின்றது.அத்துடன் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவோம் எனப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அதற்காகத் தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.கடந்த காலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்று மீண்டும் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்றும், 2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவது என்றால் பொருளாதார வளர்ச்சி உயர்மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.1975 ஆண்டு முதல் இதுவரை IMF 75 நாடுகளில் செயற்படுத்திய திட்டங்களில் 59 சதவீதமானவை 2 ஆம் 3 ஆம் 4 ஆம் கடன் மறுசீரமைப்புக்கு செல்ல நேரிட்டது.இது பாரதூரமான அழிவாக அமையும் என்றும் இதனை யாரும் வெளியில் சொல்வதில்லை எனவும் தெரிவித்தார்.பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடனை திருப்பிச் செலுத்தவும் முயற்சிக்கும் அரசாங்கம் எவ்வாறு அரச வருமானத்தை அதிகரிப்பது என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவில்லை.இது தொடர்பில் தற்போது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்கள் வெறுமனே கற்பனை விடயங்களாகவே தம்மால் பார்க்க முடியும்.எனவே அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதேநேரம் மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர் கடந்த நாட்களில் வழங்கப்படாமல் இருக்கும் அந்த தொகையை வழங்குமாறும் வலியுறுத்தினார்.