• Jun 18 2025

கந்தளாயில் இடிந்து வீழ்ந்த கட்டடச் சுவர் - ஒருவர் உயிரிழப்பு!

shanuja / Jun 18th 2025, 10:54 am
image

கந்தளாய்ப் பகுதியில் பழைய கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்தச் சம்பவத்தில் கந்தளாய் - சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய கலுகபுகே சரத் பெரேரா என்பவரே உயிரிழந்தவராவார்.  


குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பழைய கட்டிடத்தின் சுவரை அகற்ற முயன்றபோது அது இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 


உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கந்தளாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

கந்தளாயில் இடிந்து வீழ்ந்த கட்டடச் சுவர் - ஒருவர் உயிரிழப்பு கந்தளாய்ப் பகுதியில் பழைய கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கந்தளாய் - சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய கலுகபுகே சரத் பெரேரா என்பவரே உயிரிழந்தவராவார்.  குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பழைய கட்டிடத்தின் சுவரை அகற்ற முயன்றபோது அது இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கந்தளாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement