• May 19 2024

மலையகத்தில் வன நிலங்களுக்கு தீ வைப்பு - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியீடு

Tharun / May 5th 2024, 7:20 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, மலையகத்தில் உள்ள பெறுமதி மிக்க  சுற்றுச்சூழல் அமைப்பு அமைந்துள்ள வன நிலங்களுக்கு தீ வைப்பு பொழுது போக்காக காணப்படுவதாக மலையக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 மிகவும் பெறுமதி வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளான நாட்டின் மையப்பகுதியில் உள்ள காட்டுத் தீ காரணமாக, தாவரங்கள், மருத்துவ தாவரங்கள், வன விலங்குகள், பறவைகள், ஊர்வன, பட்டாம்பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளது.

மத்திய மலைப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகள், நீர் ஊற்றுகள் உள்ள பகுதிகள், புதர் காடுகள், தோட்டங்கள், உயரமான மலை உச்சிகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் தீ வைத்து எரிக்கப்  படுவதாகவும், சிலர் விலங்குகளை வேட்டையாடுவதையும், விறகுகள் பெற்று கொள்ள க்கமாகக் நோக்குடன் இவ்வாறான செயலை  மேற் கொண்டுள்ளனர். 

கால்நடைகளுக்கு புதிய புல் வழங்குவதற்காக, காடுகளுக்கு தீ வைப்பதாக மலையக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 இதனால் நீர் ஆதாரங்கள் வறண்டு போவதுடன், வனவிலங்குகள் மரணம், அழியும் அபாயத்தில் உள்ளதுடன் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அழிவு, மற்றும் பல்வேறு ஆக்கிரமிப்பு தாவரங்கள் பரவுவது போன்ற பாதகமான செயல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

மதிய மலை நாட்டில் மலைப்பாங்கான பகுதிகளில் மழைக்காலத்தில் மலைப்பகுதிகளில் மண்சரிவு அபாயம் 

நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவிக்கிறது

உடன் தீ பரவும் பகுதியில் தீயை அணைக்க அவசர தொலைபேசி இலக்கமான 117 அல்லது அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,  பொலிஸ் நிலையம், இராணுவத் தளம், பொறுப்பான அரச நிறுவனம் மற்றும் வனப்பகுதியின் கிராம உத்தியோகத்தர் ஆகியோருக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களைக் கோருவதாக என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர் .

மலையகத்தில் வன நிலங்களுக்கு தீ வைப்பு - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியீடு நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, மலையகத்தில் உள்ள பெறுமதி மிக்க  சுற்றுச்சூழல் அமைப்பு அமைந்துள்ள வன நிலங்களுக்கு தீ வைப்பு பொழுது போக்காக காணப்படுவதாக மலையக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் பெறுமதி வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளான நாட்டின் மையப்பகுதியில் உள்ள காட்டுத் தீ காரணமாக, தாவரங்கள், மருத்துவ தாவரங்கள், வன விலங்குகள், பறவைகள், ஊர்வன, பட்டாம்பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளது.மத்திய மலைப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகள், நீர் ஊற்றுகள் உள்ள பகுதிகள், புதர் காடுகள், தோட்டங்கள், உயரமான மலை உச்சிகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் தீ வைத்து எரிக்கப்  படுவதாகவும், சிலர் விலங்குகளை வேட்டையாடுவதையும், விறகுகள் பெற்று கொள்ள க்கமாகக் நோக்குடன் இவ்வாறான செயலை  மேற் கொண்டுள்ளனர். கால்நடைகளுக்கு புதிய புல் வழங்குவதற்காக, காடுகளுக்கு தீ வைப்பதாக மலையக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் நீர் ஆதாரங்கள் வறண்டு போவதுடன், வனவிலங்குகள் மரணம், அழியும் அபாயத்தில் உள்ளதுடன் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அழிவு, மற்றும் பல்வேறு ஆக்கிரமிப்பு தாவரங்கள் பரவுவது போன்ற பாதகமான செயல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். மதிய மலை நாட்டில் மலைப்பாங்கான பகுதிகளில் மழைக்காலத்தில் மலைப்பகுதிகளில் மண்சரிவு அபாயம் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவிக்கிறதுஉடன் தீ பரவும் பகுதியில் தீயை அணைக்க அவசர தொலைபேசி இலக்கமான 117 அல்லது அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,  பொலிஸ் நிலையம், இராணுவத் தளம், பொறுப்பான அரச நிறுவனம் மற்றும் வனப்பகுதியின் கிராம உத்தியோகத்தர் ஆகியோருக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களைக் கோருவதாக என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர் .

Advertisement

Advertisement

Advertisement