• May 12 2025

பேருந்து விபத்து: தயார் நிலையில் உலங்கு வானூர்திகள்

Chithra / May 11th 2025, 1:56 pm
image


 ரம்பொட பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர 02 உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், விமானப்படை இந்த இரண்டு உலங்கு வானூர்திகளையும் இரத்மலானை விமானப்படை தளத்தில் தயார் நிலையில் வைத்துள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரண்டு பெல் 412 உலங்கு வானூர்திகள் அவசர மீட்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

பேருந்து விபத்து: தயார் நிலையில் உலங்கு வானூர்திகள்  ரம்பொட பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர 02 உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், விமானப்படை இந்த இரண்டு உலங்கு வானூர்திகளையும் இரத்மலானை விமானப்படை தளத்தில் தயார் நிலையில் வைத்துள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.இதற்காக, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரண்டு பெல் 412 உலங்கு வானூர்திகள் அவசர மீட்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement