• Oct 05 2024

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து; ஐந்து பேர் காயம்! இன்று காலையில் சம்பவம்

Chithra / Jun 12th 2024, 10:22 am
image

Advertisement

 

கொட்டாவை - மகும்புர அதிவேக நெடுஞ்சாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று  காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது, ​​பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால், சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல், மற்றுமொரு பேருந்தில் மோதியுள்ளது.

அத்துடன் பேருந்து நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதுடன்,

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து; ஐந்து பேர் காயம் இன்று காலையில் சம்பவம்  கொட்டாவை - மகும்புர அதிவேக நெடுஞ்சாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.இன்று  காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தனியார் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது, ​​பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால், சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல், மற்றுமொரு பேருந்தில் மோதியுள்ளது.அத்துடன் பேருந்து நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதுடன்,பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement