• Jul 27 2024

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் கனேடிய உயர்ஸ்தானிகர்..!samugammedia

mathuri / Jan 10th 2024, 9:09 pm
image

Advertisement

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (10.01.2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 


இதன் போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில்  ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர் தெரிவித்தார். 


அத்துடன் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள  பசுமை சக்திவள திட்டங்கள் , பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் கனேடிய உயர்ஸ்தானிகர்.samugammedia இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (10.01.2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில்  ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.மேலும், நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள  பசுமை சக்திவள திட்டங்கள் , பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement