• Sep 08 2024

பரீட்சைகள் நடத்தப்படும் காலத்தில் மாற்றம்! கல்வி அமைச்சர் அறிவிப்பு

Chithra / Jul 25th 2024, 8:04 am
image

Advertisement

 

பரீட்சைகள் நாட்காட்டியை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே திட்டமிட்டபடி, நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியானால் அது சாத்தியமாகும். 

அதேநேரம், உயர் தரம் மற்றும் ஏனைய பரீட்சைகளை அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

பரீட்சைகள் நடத்தப்படும் காலத்தில் மாற்றம் கல்வி அமைச்சர் அறிவிப்பு  பரீட்சைகள் நாட்காட்டியை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியானால் அது சாத்தியமாகும். அதேநேரம், உயர் தரம் மற்றும் ஏனைய பரீட்சைகளை அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement