• May 03 2024

நாட்டில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

Chithra / Mar 30th 2024, 7:15 am
image

Advertisement

  

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் நேற்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என். சமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மரக்கறிகளின் விலை குறைந்துள்ளமையினால் வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சில வியாபாரிகள் தூக்கி எறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

மேலும், வெங்காய இலை 80 ரூபாய், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாய், மக்காச்சோளம் கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் 100 ரூபாய், தக்காளி கிலோ 120, பூசணி 120 ரூபாய், போஞ்சி கிலோ 100, வெண்டைக்காய் கிலோ 140, கரட் 150, முட்டைகோஸ் கிலோ 150, பச்சை மிளகாய் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளரி 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ இஞ்சி 1300 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (29) பேலியகெட மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மீன் சந்தை வர்த்தக நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.


நாட்டில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.   பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் நேற்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என். சமரதுங்க தெரிவித்துள்ளார்.மேலும், மரக்கறிகளின் விலை குறைந்துள்ளமையினால் வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சில வியாபாரிகள் தூக்கி எறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.அதன்படி, நேற்று ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.மேலும், வெங்காய இலை 80 ரூபாய், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாய், மக்காச்சோளம் கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் 100 ரூபாய், தக்காளி கிலோ 120, பூசணி 120 ரூபாய், போஞ்சி கிலோ 100, வெண்டைக்காய் கிலோ 140, கரட் 150, முட்டைகோஸ் கிலோ 150, பச்சை மிளகாய் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளரி 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ இஞ்சி 1300 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.இதேவேளை, நேற்று (29) பேலியகெட மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மீன் சந்தை வர்த்தக நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement