• Sep 08 2024

Tharun / Jun 7th 2024, 7:21 pm
image

Advertisement

T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.

இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கலந்துரையாடி முடிவெடுத்ததாகவும், அவர்கள் சிறந்த மனநிலையில் இருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் திலின கண்டம்பி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், நாளை பங்களாதேஷ் அணியுடனான போட்டி இலங்கைக்கு மிகவும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணியில் மாற்றம் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கலந்துரையாடி முடிவெடுத்ததாகவும், அவர்கள் சிறந்த மனநிலையில் இருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் திலின கண்டம்பி தெரிவித்தார்.எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், நாளை பங்களாதேஷ் அணியுடனான போட்டி இலங்கைக்கு மிகவும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.இலங்கை – பங்களாதேஷ் போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement