• May 18 2024

தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப கல்வி முறையில் மாற்றம்..! அதிபர் ரணில் அறிவிப்பு!

Chithra / Feb 1st 2024, 9:19 am
image

Advertisement

 

அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டில் இந்த கட்டட நிர்மாணத்திற்கு அடிக்கல் நடுவதற்கு பிரதமராக வந்திருந்தேன். இன்று கட்டடத்தைத் திறப்பதற்கு அதிபராக வந்துள்ளேன். கொரோனா தொற்று பரவலால் இந்த கட்டட நிர்மாண பணிகள் தாமதமாகியிருந்தன.

கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.

தொழில்நுட்ப யுகம் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்காது. வரலாற்றில் இருந்த அணுகுமுறைகள் இன்று வேறுவிதமாக வளர்ச்சியடைந்துள்ளன.

தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இலங்கையில் கல்வி முறையை வலுப்படுத்துவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப கல்வி முறையில் மாற்றம். அதிபர் ரணில் அறிவிப்பு  அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் இந்த கட்டட நிர்மாணத்திற்கு அடிக்கல் நடுவதற்கு பிரதமராக வந்திருந்தேன். இன்று கட்டடத்தைத் திறப்பதற்கு அதிபராக வந்துள்ளேன். கொரோனா தொற்று பரவலால் இந்த கட்டட நிர்மாண பணிகள் தாமதமாகியிருந்தன.கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.தொழில்நுட்ப யுகம் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்காது. வரலாற்றில் இருந்த அணுகுமுறைகள் இன்று வேறுவிதமாக வளர்ச்சியடைந்துள்ளன.தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இலங்கையில் கல்வி முறையை வலுப்படுத்துவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement