• Oct 18 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம்; ஊழியரின் கண்ணத்தில் அறைந்த இராஜாங்க அமைச்சர்!

Chithra / May 16th 2024, 3:35 pm
image

Advertisement

 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 14ஆம் திகதி விமான நிலையத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர், அங்கிருந்த ஊழியர் ஒருவரின் கண்ணத்தில் அறைந்து பல பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குறித்த அமைச்சரின் மனைவி உட்பட பலர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் பிரதான வாயில் வழியாக விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததையடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம்; ஊழியரின் கண்ணத்தில் அறைந்த இராஜாங்க அமைச்சர்  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளனகடந்த 14ஆம் திகதி விமான நிலையத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர், அங்கிருந்த ஊழியர் ஒருவரின் கண்ணத்தில் அறைந்து பல பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.குறித்த அமைச்சரின் மனைவி உட்பட பலர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இராஜாங்க அமைச்சரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் பிரதான வாயில் வழியாக விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது, அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததையடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement