• Apr 26 2026

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம்

Chithra / Mar 1st 2026, 3:12 pm
image



பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி , பருத்தித்துறை, மல்லாகம் மற்றும் யாழ்பாண நீதிமன்றங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.


பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு இன்று(01) விஜயம் மேற்கொண்டார்.


அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை யூட்சன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.


பிரதம நீதியரசர் அடங்கிய குழுவினரை சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள், உத்தியோகத்தர்கள் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர்.


அதனைத் தொடந்து சாவகச்சேரி நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் பிரதம நீதியரசர் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, அலுவலக செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.


அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, பருத்தித்துறை, மல்லாகம் மற்றும் யாழ்பாண நீதிமன்றங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.


இதேவேளை, நேற்றைய தினம் வவுனியா மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி , பருத்தித்துறை, மல்லாகம் மற்றும் யாழ்பாண நீதிமன்றங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு இன்று(01) விஜயம் மேற்கொண்டார்.அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை யூட்சன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.பிரதம நீதியரசர் அடங்கிய குழுவினரை சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள், உத்தியோகத்தர்கள் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர்.அதனைத் தொடந்து சாவகச்சேரி நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் பிரதம நீதியரசர் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, அலுவலக செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, பருத்தித்துறை, மல்லாகம் மற்றும் யாழ்பாண நீதிமன்றங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.இதேவேளை, நேற்றைய தினம் வவுனியா மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement