• Mar 26 2025

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் சிக்குன்குனியா நோய் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Chithra / Mar 24th 2025, 9:12 am
image


சில வருடங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“சிக்குன்குனியா” நோய் தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களிலும் பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் பரவும் நோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் சிக்குன்குனியா நோய் மீண்டும் தலைதூக்கி வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நாட்கள் பாடசாலை விடுமுறை நாட்கள் என்பதால், குழந்தைகள் அடிக்கடி சுற்றுச்சூழலுக்கு ஆளாக நேரிடும், 

மேலும் சில பகுதிகளில் மழைக்காலம் அதிகரிக்கும் போது, ​​நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

தற்சமயம் தொடரும் மழையுடனான வானிலையால், நுளம்புகள் பெரும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்மாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் சிக்குன்குனியா நோய் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை சில வருடங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.“சிக்குன்குனியா” நோய் தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களிலும் பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் பரவும் நோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நாட்டில் சிக்குன்குனியா நோய் மீண்டும் தலைதூக்கி வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்த நாட்கள் பாடசாலை விடுமுறை நாட்கள் என்பதால், குழந்தைகள் அடிக்கடி சுற்றுச்சூழலுக்கு ஆளாக நேரிடும், மேலும் சில பகுதிகளில் மழைக்காலம் அதிகரிக்கும் போது, ​​நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.தற்சமயம் தொடரும் மழையுடனான வானிலையால், நுளம்புகள் பெரும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்மாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement