• Jun 23 2025

சீனா - திபெத் மாகாணத்தில் திடீர் நிலநடுக்கம்!

shanuja / Jun 23rd 2025, 11:13 am
image

சீனாவின்  திபெத் மாகாணத்தில் நேற்று இரவு (22) திடீர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


இரவு 7.22 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 


10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 


இமயமலையின் வடக்கு பகுதியில் ஓர் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனா - திபெத் மாகாணத்தில் திடீர் நிலநடுக்கம் சீனாவின்  திபெத் மாகாணத்தில் நேற்று இரவு (22) திடீர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு 7.22 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இமயமலையின் வடக்கு பகுதியில் ஓர் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement