• Jun 18 2025

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் சிஐடியினர் விசாரணை- சபையில் அர்ச்சுனா எம்.பி சுட்டிக்காட்டு..!

Sharmi / Jun 17th 2025, 11:03 am
image

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

29 1/2 இன் கீழ் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

என்னை குற்றப் புலனாய்வு பிரிவினர் அழைத்து 323 கொள்கலன்கள் தொடர்பில் நான் பாராளுமன்றில் கூறிய விடயங்கள் தொடர்பாக விசாரணை செய்திருக்கின்றார்கள்.

இது தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி உங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, அந்த கடிதங்களை நான் வாசித்து பார்த்தேன் எனவும் தெரிவித்தார்.












சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் சிஐடியினர் விசாரணை- சபையில் அர்ச்சுனா எம்.பி சுட்டிக்காட்டு. சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,29 1/2 இன் கீழ் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.என்னை குற்றப் புலனாய்வு பிரிவினர் அழைத்து 323 கொள்கலன்கள் தொடர்பில் நான் பாராளுமன்றில் கூறிய விடயங்கள் தொடர்பாக விசாரணை செய்திருக்கின்றார்கள்.இது தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி உங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, அந்த கடிதங்களை நான் வாசித்து பார்த்தேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement