சுவிட்சர்லாந்தின் காலநிலை தொடர்பான கொள்கை வாழ்வதற்கான உரிமையை பாதிப்பதாக 2000 ற்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து பெண்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
இதனால், மனித உரிமைகள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக முதல் முறையாக மனித உரிமைகளிற்கான ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து நீதிமன்றங்களில் ஆறு வருடகாலமாக போராடி தீர்வு கிடைக்காதமையாலே 70வயதான , தங்களை கிளைமேட் சீனியர்களின் கிளப் என அழைக்கும் பெண்களே நீதிமன்றம் சென்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் காலநிலை கொள்கை மனித உரிமைகள் உடல்நலம் மற்றும் உயிர்வாழ்க்கை ஆகியவற்றை பாதிக்கின்றது என்பதற்கான தமது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
பசுமை இல்ல வாயுக்களின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காலநிலை கொள்கை வாழ்க்கையை பாதிக்கின்றது - ஐரோப்பிய நீதிமன்றம் சென்ற பெண்கள் samugammedia சுவிட்சர்லாந்தின் காலநிலை தொடர்பான கொள்கை வாழ்வதற்கான உரிமையை பாதிப்பதாக 2000 ற்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து பெண்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.இதனால், மனித உரிமைகள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக முதல் முறையாக மனித உரிமைகளிற்கான ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. சுவிட்சர்லாந்து நீதிமன்றங்களில் ஆறு வருடகாலமாக போராடி தீர்வு கிடைக்காதமையாலே 70வயதான , தங்களை கிளைமேட் சீனியர்களின் கிளப் என அழைக்கும் பெண்களே நீதிமன்றம் சென்றுள்ளனர்.சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் காலநிலை கொள்கை மனித உரிமைகள் உடல்நலம் மற்றும் உயிர்வாழ்க்கை ஆகியவற்றை பாதிக்கின்றது என்பதற்கான தமது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.பசுமை இல்ல வாயுக்களின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.