விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரனின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது
போராளிகள் நலன்புரிச் சங்கமும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வானது மாலை-04 மணி முதல் யாழ் உரும்பிராய்ச் சந்திக்கு அருகிலுள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளதாகப் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் செல்வரத்தினம் தனுபன் தெரிவித்தார்.
யாழ்.உரும்பிராயிலுள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாலை-04 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றலுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகும். குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படும்.
எனவே, குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சமுகமட்டப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனவும் கூறினார்.
இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சார்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநரும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கமும் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் - நாளை மறுதினம் முன்னெடுப்பு விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரனின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதுபோராளிகள் நலன்புரிச் சங்கமும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வானது மாலை-04 மணி முதல் யாழ் உரும்பிராய்ச் சந்திக்கு அருகிலுள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளதாகப் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் செல்வரத்தினம் தனுபன் தெரிவித்தார்.யாழ்.உரும்பிராயிலுள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாலை-04 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றலுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகும். குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படும். எனவே, குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சமுகமட்டப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனவும் கூறினார். இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சார்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநரும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கமும் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.