• Sep 21 2024

அடுத்த வருடம் பொருட்களின் விலை உயரும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!samugammedia

Anaath / Dec 3rd 2023, 2:32 pm
image

Advertisement

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை 72 சதவீதம் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024ஆம் ஆண்டில் இலங்கையில் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின்  கட்டணங்கள் உள்ளிட்டவை  கணிசமான அளவில் அதிகரிக்கும்.  காரணம் மறைமுக வரிகள் மூலமை் 72 சதவீதம் கூடுதல் வருவாயை அரசு எதிர்பார்ப்பதே ஆகும்.  

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி 122,400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது, ​​வணிகர்கள் வாடிக்கையாளரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்க முயற்சிப்பார்கள். அதன்படி, இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாதது.

அரிசி, மா, சர்க்கரை, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 72 சதவீதம் உயரும். பொது மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும்  என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் பொருட்களின் விலை உயரும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.samugammedia இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை 72 சதவீதம் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024ஆம் ஆண்டில் இலங்கையில் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின்  கட்டணங்கள் உள்ளிட்டவை  கணிசமான அளவில் அதிகரிக்கும்.  காரணம் மறைமுக வரிகள் மூலமை் 72 சதவீதம் கூடுதல் வருவாயை அரசு எதிர்பார்ப்பதே ஆகும்.  அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி 122,400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது, ​​வணிகர்கள் வாடிக்கையாளரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்க முயற்சிப்பார்கள். அதன்படி, இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாதது.அரிசி, மா, சர்க்கரை, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 72 சதவீதம் உயரும். பொது மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும்  என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement