திருகோணமலை - தம்பலகாமம், பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியின் பிரதான வீதி அருகில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்ததில் நடத்துநர் உயிரிழந்துள்ளார்.
இன்று (20) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாலம்போட்டாறு, கண்டி - திருகோணமலை வீதியில் உள்ள கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும் பஸ்ஸில் ஓடிச் சென்று ஏறிய போது தவறி விழுந்ததில் தலை அடிபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த 41 வயதுடைய லலித் குமார என்ற குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை - கந்தளாய் வரையான தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் நடத்துநரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் பலி; கோயில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டு ஏறும்போது சம்பவம் திருகோணமலை - தம்பலகாமம், பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியின் பிரதான வீதி அருகில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்ததில் நடத்துநர் உயிரிழந்துள்ளார்.இன்று (20) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,பாலம்போட்டாறு, கண்டி - திருகோணமலை வீதியில் உள்ள கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும் பஸ்ஸில் ஓடிச் சென்று ஏறிய போது தவறி விழுந்ததில் தலை அடிபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த 41 வயதுடைய லலித் குமார என்ற குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - கந்தளாய் வரையான தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் நடத்துநரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.