• Mar 20 2025

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்; எதிரணியினர் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டாம்! - பிரதி அமைச்சர் அருண்

Chithra / Mar 18th 2025, 8:22 am
image


இன்னும் சில தினங்களில், கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, விரைவாக அது, பாவனைக்காக கையளிக்கப்படும்.இது குறித்து எவரும் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, கிராமப்புற வீதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேச ஹிஜ்ரா வீதியை புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.

இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தப் பாலத்தை வைத்து, சமூக ஊடகங்களில் இனரீதியாக மதரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதற்கு தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்.

எவர் என்ன சொன்னாலும் குறிஞ்சாக்கேணி பாலம் எங்களுடைய ஆட்சி காலத்திலேயே கட்டப்படும், எங்களுடைய ஆட்சி காலத்திலே அது, மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

மக்கள் மத்தியில் எந்தவிதமான பிரிவினைகளை தூண்ட முடியுமோ அந்த அளவுக்கு அதனை செய்து, தமது சுயலாபங்களுக்காக அரசியலைச் செய்து வந்த சம்பிரதாயங்களுக்கு முடிவு கட்டி, ஒரு மக்கள் மயமான ஆட்சி முறையை இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியிருக்கின்றது.

முஸ்லிம்களை அதிக பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியா பிரதேசத்திலே ஒரு தமிழ் பிரதிநிதியும் ஒரு சிங்கள பிரதிநிதி இணைந்து, இந்த வேலை திட்டத்தை இங்கு ஆரம்பித்து இருக்கின்றோம். 

85 மில்லியன் ரூபாய் செலவில், 1.5 கிலோமீட்டர் நீளமான இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் முதன்முறையாக கிண்ணியாவிலேயே இந்த அபிவிருத்தத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இதுதான் மக்களாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன். என தெரிவித்தார்.


குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்; எதிரணியினர் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டாம் - பிரதி அமைச்சர் அருண் இன்னும் சில தினங்களில், கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, விரைவாக அது, பாவனைக்காக கையளிக்கப்படும்.இது குறித்து எவரும் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, கிராமப்புற வீதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேச ஹிஜ்ரா வீதியை புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்தப் பாலத்தை வைத்து, சமூக ஊடகங்களில் இனரீதியாக மதரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதற்கு தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்.எவர் என்ன சொன்னாலும் குறிஞ்சாக்கேணி பாலம் எங்களுடைய ஆட்சி காலத்திலேயே கட்டப்படும், எங்களுடைய ஆட்சி காலத்திலே அது, மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.மக்கள் மத்தியில் எந்தவிதமான பிரிவினைகளை தூண்ட முடியுமோ அந்த அளவுக்கு அதனை செய்து, தமது சுயலாபங்களுக்காக அரசியலைச் செய்து வந்த சம்பிரதாயங்களுக்கு முடிவு கட்டி, ஒரு மக்கள் மயமான ஆட்சி முறையை இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியிருக்கின்றது.முஸ்லிம்களை அதிக பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியா பிரதேசத்திலே ஒரு தமிழ் பிரதிநிதியும் ஒரு சிங்கள பிரதிநிதி இணைந்து, இந்த வேலை திட்டத்தை இங்கு ஆரம்பித்து இருக்கின்றோம். 85 மில்லியன் ரூபாய் செலவில், 1.5 கிலோமீட்டர் நீளமான இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட உள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் முதன்முறையாக கிண்ணியாவிலேயே இந்த அபிவிருத்தத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இதுதான் மக்களாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன். என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement