• May 17 2024

தொடரும் 'யுக்திய' நடவடிக்கை...! 647 சந்தேக நபர்கள் கைது...!

Sharmi / Feb 28th 2024, 10:13 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால்  முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 647  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 540 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 107 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 647 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை 118 கிராம் 252 மில்லி கிராம் ஹெராயின், 144 கிராம் பனி 674 மி.கி,  கஞ்சா 01 கிலோ 841 கிராம்,  மாவா 01 கிலோ 33 கிராம்,  துலே 07 கிராம் 12 மி.கி32 மாத்திரைகள், 302 கஞ்சா செடிகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 540 சந்தேக நபர்களில் ஒருவர் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 19 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்ட 107 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 07 சந்தேக நபர்களும், 97 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 01 சந்தேக நபர்களும், 02 சந்தேக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.




தொடரும் 'யுக்திய' நடவடிக்கை. 647 சந்தேக நபர்கள் கைது. நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால்  முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 647  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 540 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 107 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 647 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை 118 கிராம் 252 மில்லி கிராம் ஹெராயின், 144 கிராம் பனி 674 மி.கி,  கஞ்சா 01 கிலோ 841 கிராம்,  மாவா 01 கிலோ 33 கிராம்,  துலே 07 கிராம் 12 மி.கி32 மாத்திரைகள், 302 கஞ்சா செடிகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 540 சந்தேக நபர்களில் ஒருவர் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 19 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்ட 107 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 07 சந்தேக நபர்களும், 97 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 01 சந்தேக நபர்களும், 02 சந்தேக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement