• Jun 13 2025

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விவகாரம்: உண்மையை மறைப்பதற்கு ஜனாதிபதி முயற்சி-முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு..!

Sharmi / Jun 12th 2025, 9:28 am
image

இலங்கை சுங்கத்தில் இருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்லன்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அரசாங்கம் இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்காமல் இருக்கிறது. இந்த கொள்கலன் விடுவிக்கப்பட்ட விடயத்தை அரசியல்வாதிகள் யாரும் வெளிப்படுத்தவில்லை.

மாறாக சுங்க தொழிற்சங்கமே இது தொடர்பில் ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில் கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இனம் காணப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்தே இதுதொடர்பில் ஏனைய தரப்பினருக்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதை தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்துள்ளது.

ஆனால் சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்கு பின்னர் சுங்கத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, குறித்த கொள்கலன்களை விடுவிப்பில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அதுதொடர்பில் மேலிடத்தில் இருந்து யாரும் அறிவிக்கவில்லை என்றும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என சில பொருட்களின் பட்டியலையும் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த அதிகாரிக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களே, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதேநேரம் இந்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பில் பலரும் வினவியபோது எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்த சுங்க பணிப்பாளர், 6 மாதங்களுக்கு பின்னர் குறித்த கொள்கல்களில் ஆபத்தான் பொருட்கள் எதுவும் இல்லை என தெரிவிப்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? ஏனெனில் தற்போது அந்த பொருட்கள் விடுக்கப்பட்டு முடித்துள்ளன.

அதேநேரம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய பொசன் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிட்டு குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி இதனை வேண்டுமென்றே மறைத்திருக்க வேண்டும். ஏனெனில் சுங்கம் ஜனாதிபதியின் நிதி அமைச்சின் கீழே இருக்கிறது. அதனாலே சுங்க தொழிற்சங்கம் இது தொடர்பில் ஆரம்பமாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டால் இறுதியில் ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு கூறவேண்டி ஏற்படுகிறது. எனவேதான் ஜனாதிபதி ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது சுங்க திணைக்களத்தை தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்துள்ளார் என்றார்.

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விவகாரம்: உண்மையை மறைப்பதற்கு ஜனாதிபதி முயற்சி-முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு. இலங்கை சுங்கத்தில் இருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்லன்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.ஆனால் அரசாங்கம் இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்காமல் இருக்கிறது. இந்த கொள்கலன் விடுவிக்கப்பட்ட விடயத்தை அரசியல்வாதிகள் யாரும் வெளிப்படுத்தவில்லை.மாறாக சுங்க தொழிற்சங்கமே இது தொடர்பில் ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில் கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இனம் காணப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுங்க தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்தே இதுதொடர்பில் ஏனைய தரப்பினருக்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதை தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்துள்ளது.ஆனால் சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்கு பின்னர் சுங்கத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, குறித்த கொள்கலன்களை விடுவிப்பில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அதுதொடர்பில் மேலிடத்தில் இருந்து யாரும் அறிவிக்கவில்லை என்றும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என சில பொருட்களின் பட்டியலையும் தெரிவித்திருந்தார்.ஆனால் குறித்த அதிகாரிக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களே, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.அதேநேரம் இந்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பில் பலரும் வினவியபோது எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்த சுங்க பணிப்பாளர், 6 மாதங்களுக்கு பின்னர் குறித்த கொள்கல்களில் ஆபத்தான் பொருட்கள் எதுவும் இல்லை என தெரிவிப்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் ஏனெனில் தற்போது அந்த பொருட்கள் விடுக்கப்பட்டு முடித்துள்ளன.அதேநேரம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய பொசன் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிட்டு குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.ஜனாதிபதி இதனை வேண்டுமென்றே மறைத்திருக்க வேண்டும். ஏனெனில் சுங்கம் ஜனாதிபதியின் நிதி அமைச்சின் கீழே இருக்கிறது. அதனாலே சுங்க தொழிற்சங்கம் இது தொடர்பில் ஆரம்பமாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தது.இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டால் இறுதியில் ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு கூறவேண்டி ஏற்படுகிறது. எனவேதான் ஜனாதிபதி ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது சுங்க திணைக்களத்தை தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்துள்ளார் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement