• Aug 22 2025

ஊழல் குற்றச்சாட்டு மாயமான ராஜித வீட்டிற்கு முன் பிடியாணை அறிவிப்பை ஒட்டிய அதிகாரிகள்

shanuja / Aug 21st 2025, 11:21 pm
image


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர். 


தலஹேனவில் உள்ள ராஜிதவின் வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் அறிவிப்பை ஒட்டியதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 


இந்த மாத தொடக்கத்தில், இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பித்தது. 


முன்னாள் அமைச்சர் பல அழைப்பாணைகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டார் என்றும், அவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.


இந்த வழக்கு கிரிண்டா மீன்வளத் துறைமுகத்தில் மணல் அள்ளும் திட்டத்துடன் தொடர்புடையது, இது ஒரு கொரிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அரசுக்கு ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. 


சேனாரத்னவை இன்னும் காணவில்லை என்றும், அவரது தொலைபேசிகள் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், அவரது வீடு காலியாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய இலஞ்சம் மற்றும் ஊழல்  ஆணைக்குழு, அவர் வேண்டுமென்றே கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு மாயமான ராஜித வீட்டிற்கு முன் பிடியாணை அறிவிப்பை ஒட்டிய அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர். தலஹேனவில் உள்ள ராஜிதவின் வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் அறிவிப்பை ஒட்டியதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த மாத தொடக்கத்தில், இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பித்தது. முன்னாள் அமைச்சர் பல அழைப்பாணைகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டார் என்றும், அவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.இந்த வழக்கு கிரிண்டா மீன்வளத் துறைமுகத்தில் மணல் அள்ளும் திட்டத்துடன் தொடர்புடையது, இது ஒரு கொரிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அரசுக்கு ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. சேனாரத்னவை இன்னும் காணவில்லை என்றும், அவரது தொலைபேசிகள் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், அவரது வீடு காலியாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய இலஞ்சம் மற்றும் ஊழல்  ஆணைக்குழு, அவர் வேண்டுமென்றே கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement