• Sep 19 2024

வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட சிக்கல் - தேங்கிக்கிடக்கும் 12 இலட்சம் கடிதங்கள்

Chithra / Jul 10th 2024, 12:47 pm
image

Advertisement


தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் ஏனைய தபால் நிலையங்களில் கிட்டத்தட்ட 12 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் 07 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொதிகள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த இரு நாட்கள் தொடர்ந்து 48 மணிநேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட சிக்கல் - தேங்கிக்கிடக்கும் 12 இலட்சம் கடிதங்கள் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் ஏனைய தபால் நிலையங்களில் கிட்டத்தட்ட 12 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் 07 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொதிகள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த இரு நாட்கள் தொடர்ந்து 48 மணிநேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement