• Jan 16 2026

இன்றிரவு வரை ஆபத்து - பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

Chithra / Dec 7th 2025, 2:29 pm
image

 

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த எச்சரிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை  (7) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மின்னல் தாக்கம் நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.


மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.


இந்நிலையில், மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு  வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


இன்றிரவு வரை ஆபத்து - பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை  பலத்த மின்னல் தாக்கம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை  (7) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மின்னல் தாக்கம் நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.இந்நிலையில், மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு  வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement