• May 04 2024

காதலனுடன் மகள் ஓட்டம் - காதலனின் தாயை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட கொடுமை! samugammedia

Tamil nila / Dec 11th 2023, 10:44 pm
image

Advertisement

தங்கள் பெண் தனது காதலனுடன் ஊரை விட்டு ஓடியதால், காதலனின் தாயை நிர்வாணப்படுத்தி ஊருக்குள் வலம் வரச்செய்து பெண்ணின் உறவினர்கள் அராஜகம் செய்திருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த வந்தமரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்ட பிரியங்கா என்ற பெண், திடீரென தனது காதலன் அசோக் என்பவருடன் ஊரைவிட்டு ஓடிப்போனார். பிரியங்காவுக்கு இன்னொரு நபருடன் நிச்சயிக்கப்பட்டு, இன்று(11) திருமணம் நடைபெறுவதாக இருந்த சூழலில், முன்தினம் மகள் ஓடிப்போனதில் அவமானம் அடைந்ததாக பெண் வீட்டார் கருதினார்கள்.



பழிவாங்கல் நடவடிக்கையாக இளைஞனின் வீடு மீது, நேற்று நள்ளிரவு கூட்டம் ஒன்று தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்த வீட்டில் தனியே இருந்த இளைஞனின் தாயை வெளியே இழுத்துவந்து நிர்வாணப்படுத்தி, ஒரு மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர். நிறைவாக அந்தப் பெண்மணியை ஊருக்குள் நிர்வாணமாக வலம் வரச் செய்துள்ளனர்.சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து, கும்பலின் பிடியிலிருந்து பெண்மணியை மீட்டனர். 

அவரைத் தாக்கியதாக 7 நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் அசம்பாவிதம் நடைபெறாது தடுக்க, கிராமத்தில் பொலிஸ் படைகள் குவிக்கபட்டுள்ளன.

ஓடிப்போன காதல் ஜோடி ஒரே கிராமம் மற்றும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வர்க்க வேறுபாடு காரணமாக அசோக்கை பிரியங்கா குடும்பத்தினர் ஏற்கவில்லை எனவும் தெரிய வருகிறது.

மேலும், விடிந்தால் திருமணம் என்ற சூழலில் மகள் ஓடிப்போன ஏமாற்றத்தில், பெண் வீட்டார் இவ்வாறு வெறியாட்டம் நிகழ்த்தி உள்ளனர்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்திருக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”இது ஒட்டுமொத்த சமூகத்தையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இதுபோன்ற கொடூரமான செயல்களை எக்காரணம் கொண்டும் எங்கள் அரசு பொறுத்துக் கொள்ளாது” என்று தெரிவித்துள்ளார்.


காதலனுடன் மகள் ஓட்டம் - காதலனின் தாயை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட கொடுமை samugammedia தங்கள் பெண் தனது காதலனுடன் ஊரை விட்டு ஓடியதால், காதலனின் தாயை நிர்வாணப்படுத்தி ஊருக்குள் வலம் வரச்செய்து பெண்ணின் உறவினர்கள் அராஜகம் செய்திருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த வந்தமரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்ட பிரியங்கா என்ற பெண், திடீரென தனது காதலன் அசோக் என்பவருடன் ஊரைவிட்டு ஓடிப்போனார். பிரியங்காவுக்கு இன்னொரு நபருடன் நிச்சயிக்கப்பட்டு, இன்று(11) திருமணம் நடைபெறுவதாக இருந்த சூழலில், முன்தினம் மகள் ஓடிப்போனதில் அவமானம் அடைந்ததாக பெண் வீட்டார் கருதினார்கள்.பழிவாங்கல் நடவடிக்கையாக இளைஞனின் வீடு மீது, நேற்று நள்ளிரவு கூட்டம் ஒன்று தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்த வீட்டில் தனியே இருந்த இளைஞனின் தாயை வெளியே இழுத்துவந்து நிர்வாணப்படுத்தி, ஒரு மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர். நிறைவாக அந்தப் பெண்மணியை ஊருக்குள் நிர்வாணமாக வலம் வரச் செய்துள்ளனர்.சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து, கும்பலின் பிடியிலிருந்து பெண்மணியை மீட்டனர். அவரைத் தாக்கியதாக 7 நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் அசம்பாவிதம் நடைபெறாது தடுக்க, கிராமத்தில் பொலிஸ் படைகள் குவிக்கபட்டுள்ளன.ஓடிப்போன காதல் ஜோடி ஒரே கிராமம் மற்றும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வர்க்க வேறுபாடு காரணமாக அசோக்கை பிரியங்கா குடும்பத்தினர் ஏற்கவில்லை எனவும் தெரிய வருகிறது.மேலும், விடிந்தால் திருமணம் என்ற சூழலில் மகள் ஓடிப்போன ஏமாற்றத்தில், பெண் வீட்டார் இவ்வாறு வெறியாட்டம் நிகழ்த்தி உள்ளனர்.குறித்த இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்திருக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”இது ஒட்டுமொத்த சமூகத்தையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இதுபோன்ற கொடூரமான செயல்களை எக்காரணம் கொண்டும் எங்கள் அரசு பொறுத்துக் கொள்ளாது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement